/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பஸ்களில் அனுப்பப்படும் பட்டாசு பார்சல்கள் அசம்பாவிதத்திற்கு வாய்ப்பு
/
பஸ்களில் அனுப்பப்படும் பட்டாசு பார்சல்கள் அசம்பாவிதத்திற்கு வாய்ப்பு
பஸ்களில் அனுப்பப்படும் பட்டாசு பார்சல்கள் அசம்பாவிதத்திற்கு வாய்ப்பு
பஸ்களில் அனுப்பப்படும் பட்டாசு பார்சல்கள் அசம்பாவிதத்திற்கு வாய்ப்பு
ADDED : செப் 26, 2024 04:27 AM
சிவகாசி: விருதுநகர் மாவட்டத்தில்ஆபத்தான முறையில் பட்டாசு பார்சல்களை வெளி மாவட்டங்களுக்கு பஸ்களில் அனுப்பப்படுவதால் அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளது.
இம்மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை மற்றும் சுற்றியுள்ளப்பகுதியில் 1080 பட்டாசு ஆலைகள், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன. தீபாவளிக்கு இன்னும் 35 நாட்களே உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேரடியாக சிவகாசி வந்து பட்டாசுகளை வியாபாரிகள், பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். வர முடியாதவர்கள் அலைபேசியில் பட்டாசு கடைகள், ஆலைகளில் தெரிவித்து பார்சல் மூலம் பெறுகின்றனர்.
வெளி மாவட்டங்களில்இருந்து பெறப்படும் ஆர்டர்களுக்கு பட்டாசுகள்பார்சல் சர்வீஸ் மூலம் பாதுகாப்பாக அனுப்பப்படும். ஆனால் தற்போது ஒரு சிலர், பட்டாசு பார்சல்களை பயணிகளை ஏற்றி செல்லும் ஆம்னி பஸ்கள், பஸ்களில் அனுப்பி வருகின்றனர். வாடகை குறைவு என்பதால் பலர் பஸ்களில் இவ்வாறு அனுப்புகின்றனர். இதனால் அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
பட்டாசு பார்சல்களை உரிய பார்சல் சர்வீஸ் மூலம் பாதுகாப்பாக மட்டுமே அனுப்ப வேண்டும் என சமூகஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.