/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கூமாபட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு முதல் பெண் இன்ஸ்பெக்டர் நியமனம்
/
கூமாபட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு முதல் பெண் இன்ஸ்பெக்டர் நியமனம்
கூமாபட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு முதல் பெண் இன்ஸ்பெக்டர் நியமனம்
கூமாபட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு முதல் பெண் இன்ஸ்பெக்டர் நியமனம்
ADDED : ஆக 28, 2025 04:42 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : புதிதாக தரம் உயர்த்தப்பட்ட கூமாபட்டி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ் பெக்டராக தேவி பொறுப்பேற்றார்.
இதுவரை ஸ்ரீவில்லிபுத்துார், கிருஷ்ணன்கோவில், வத்திராயிருப்பு ஆகிய 3 போலீஸ் ஸ்டேஷன்கள் இன்ஸ்பெக்டர் அந்தஸ்திலும், கூமாபட்டி, நத்தம்பட்டி, மம்சாபுரம், வன்னியம்பட்டி, மல்லி போலீஸ் ஸ்டேஷன்கள் சப் இன்ஸ்பெக்டர் அந்தஸ்திலும் செயல்பட்டு வந்தது.
இதில் கடந்த மாதம் கூமாபட்டி, நத்தம் பட்டி, மம்சாபுரம் போலீஸ் ஸ்டேஷன்கள் இன்ஸ்பெக்டர் அந்தஸ்து கொண்ட ஸ்டேஷன்களாக தரம் உயர்த்தப் பட்டது. இந்நிலையில் கூமாபட்டி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக தேவி பொறுப்பேற்றுள்ளார். விரைவில் நத்தம்பட்டி, மம்சாபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கும் இன்ஸ்பெக்டர்கள் நிய மிக்கப்படவுள்ளனர்.