ADDED : செப் 03, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை, செப்.4 -
அருப்புக்கோட்டை ரமணாஸ் கல்வியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எட்., படிப்பில் சேர்ந்த மாணவிகளுக்கான துவக்க விழா நடந்தது.
கல்லூரி சேர்மன் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கல்லூரி செயலர் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார். முதல்வர் ராஜேந்திரன் வரவேற்றார். கவிஞர் முத்து முருகன் ஆசிரியர் பயிற்சி மாணவர்களின் கல்வித்தரம், கற்பித்தல் திறன் மேம்படுத்துவதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார், பள்ளி ஆய்வாளர் ரமேஷ் மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு பற்றி விளக்கம் அளித்தார்.
கலைக் கல்லூரி செயலாளர் டாக்டர் இளங்கோவன் எதிர்கால கல்வி குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
துணை முதல்வர் கலைச்செல்வி நன்றி கூறினார்.
----
