/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சத்துணவு ஊழியர்கள் மறியல்: 123 பேர் கைது
/
சத்துணவு ஊழியர்கள் மறியல்: 123 பேர் கைது
ADDED : ஆக 21, 2025 08:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : வருவாய் கிராம உதவியாளருக்கு வழங்கக்கூடிய ஓய்வூதியம் ரூ.6750 வழங்குவது, காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் எஸ்தர் தலைமை வகித்தார். செயலாளர் சுதந்திர கிளாரா, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் வைரவன், முன்னாள் மாநில துணை தலைவர் கண்ணன், சத்துணவு ஊழியர் சங்க ஓய்வு பெற்ற நிர்வாகி மாயமலை பேசினர். பொருளாளர் ஜெயலட்சுமி நன்றி கூறினார். 123 பேர் கைது செய்யப்பட்டனர்.