sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அ.தி.மு.க., முன்னாள் துணை தலைவர் வீடு துவம்சம்: மூவர் கைது

/

அ.தி.மு.க., முன்னாள் துணை தலைவர் வீடு துவம்சம்: மூவர் கைது

அ.தி.மு.க., முன்னாள் துணை தலைவர் வீடு துவம்சம்: மூவர் கைது

அ.தி.மு.க., முன்னாள் துணை தலைவர் வீடு துவம்சம்: மூவர் கைது


ADDED : ஜூன் 25, 2025 07:05 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி : நரிக்குடி அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய துணை தலைவர் சுந்தர்ராஜனின் வீட்டில் இருந்த இரு கார் கண்ணாடிகளை 6 பேர் கொண்ட கும்பல் அடித்து உடைத்ததுடன், வீட்டில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தினர். 3 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

நரிக்குடி கோ.வேலாயுதபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன் 55, அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய துணை தலைவர். நரிக்குடி சப்பாணியேந்தலில் உள்ள தோட்டத்து வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், மனைவி மகமாயி 48, இடம் உனது மகன் முத்துக்கிருஷ்ணனை எங்கே என கேட்டு, வெளியில் சென்றதாக என கூறியதையடுத்து, அக்கும்பல் அங்கிருந்த 2 கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன், வீட்டிற்குள் புகுந்து பர்னிச்சர் பொருட்களை அடித்து நொறுக்கினர். பின் கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.

நரிக்குடி போலீசார் விசாரித்தில், நரிக்குடி விடத்த குளம் பஸ் நிறுத்தம் அருகே நின்றிருந்த கம்பாளியைச் சேர்ந்த தென்னரசு, சர்வேஸ்வரனை, முத்துகிருஷ்ணன், இவரது நண்பர் பாலமுருகன் சேர்ந்து மது போதையில் தாக்கினர்.

ஆத்திரமடைந்து சர்வேஸ்வரன் நண்பர்களுடன் சேர்ந்து வீட்டிற்கு சென்று தாக்கியது தெரிந்தது. சர்வேஸ்வரன் மற்றும் இருவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us