ADDED : ஜூன் 11, 2025 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு, : சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் வைகாசி மாத பவுர்ணமி வழிபாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மலையேறினர்.
கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பவுர்ணமி வழிபாடு பூஜைகளை கோயில் பூஜாரிகள் செய்தனர். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. வத்திராயிருப்பு போலீசார், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.