/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பயிற்சி வகுப்புக்கு நிதி வழங்கல்
/
பயிற்சி வகுப்புக்கு நிதி வழங்கல்
ADDED : நவ 08, 2024 03:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நடந்த முன்னாள் மாநில நிர்வாகிகளுக்கான பாராட்டு விழாவில் பங்கேற்று முன்னாள் மாநில துணை தலைவர் கலாவதி பேசினார்.
பின் இவர், 17 ஆண்டுகளாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்களை சார்ந்தவர்களை அரசு பணிக்கு தேர்ச்சி பெற வைத்துள்ள அரசு ஊழியர் சங்க, விருதுநகர் மாவட்ட மையம் நடத்தும் டி.என்.பி.எஸ்.சி.,இலவச பயிற்சி வகுப்பின் மேம்பாட்டிற்கு ரூ.2 லட்சத்திற்கான நன்கொடையாக வழங்கினார்.
கலாவதியையும், அவரது குடும்பத்தினரையும் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அந்தோணிராஜ், செயலாளர் வைரவன் பாராட்டினர்.

