/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஊராட்சி குடிநீர் மோட்டாரில் ஒயர்களை திருடும் கும்பல் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி
/
ஊராட்சி குடிநீர் மோட்டாரில் ஒயர்களை திருடும் கும்பல் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி
ஊராட்சி குடிநீர் மோட்டாரில் ஒயர்களை திருடும் கும்பல் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி
ஊராட்சி குடிநீர் மோட்டாரில் ஒயர்களை திருடும் கும்பல் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி
ADDED : ஜன 03, 2026 06:09 AM
சிவகாசி: சிவகாசி பகுதி ஊராட்சிகளில் உள்ள கண்மாய், ஊருணி போன்ற நீர் நிலைகளில் போர்வெல் அமைக்கப்பட்டு அருகிலேயே மோட்டார் அறை கட்டப்பட்டு அங்கிருந்து மோட்டார் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப் படுகின்றது.
பெரும்பாலும் கண்மாய்கள் ஊருணிகள் ஊருக்கு வெளியே காட்டுப் பகுதியில் இருப்பதால் இரவில் மோட்டாரை கண்காணிக்க வழி இல்லை. மர்ம நபர்கள் கண்மாயில் இருந்து மோட்டாருக்கு செல்கின்ற ஒயர்களை திருடிச் சென்று விடுகின்றனர். ஒயர்கள் திருடப்படுவதால் அவ்வப்போது குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை.
இதனால் மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் பெரிதும் அவதிப்படுகின்றனர். சமீபத்தில் சித்துராஜபுரம், பேர் நாயக்கன்பட்டி, நடுவப்பட்டி, வடபட்டி, ஆனையூர் ஊராட்சிகளில் கண்மாயில் பதிக்கப்பட்டிருந்த ஒயர்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதனால் இப்பகுதி மக்கள் குடிநீருக்கு பெரிதும் சிரமப்பட்டனர்.
எனவே மின் கேபிள் ஒயர்களை திருடுபவர்களை கண்காணிக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

