தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அரசு பஸ் ஜப்தி

 அரசு பஸ் ஜப்தி

 அரசு பஸ் ஜப்தி


ADDED : பிப் 26, 2026 06:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 06:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் குன்னூரை சேர்ந்தவர் உத்தமன் 41, காண்ட்ராக்டர்.

இவர் 2019 செப். 13ல் டூவீலரில் ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து ராஜபாளையம் செல்லும்போது அரசு பஸ் மோதி காயமடைந்தார்.

இதில் ரூ. 40 லட்சம் இழப்பீடு கோரி ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதில் அவருக்கு ரூ. 16 லட்சத்து 52 ஆயிரத்து 646ஐ, மதுரை அரசு போக்குவரத்து கழகம் வழங்க 2023ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இழப்பீடு தொகை வழங்கவில்லை.

இதனால் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற கோரி 2025ல் உத்தமன், தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். இதில் அவருக்கு ரூ. 22 லட்சத்து 85 ஆயிரத்து 624 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும் இழப்பீடு தொகை வழங்கவில்லை.

இதனையடுத்து மதுரை கோட்ட அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று காலை

மதுரை கோட்ட அரசு பஸ் ஒன்றை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us