ADDED : டிச 27, 2025 06:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு நேற்று மதியம் அரசு பஸ் சென்றது. விருதுநகர் பட்டம்புதுார் அருகே நான்குவழிச் சாலையில் சென்ற போது முன்னால் பழுதாகி நின்ற லோடு வேனின் பின்புறம் மோதியது.
இதில் பஸ்சின் கண்ணாடி, முகப்பு விளக்குகள் சேதமடைந்தன. இரண்டு பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். வச்சக்காரப்பட்டி போலீசார் விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.

