ADDED : ஆக 04, 2025 03:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் எஸ்.ஆர்.என்.எம்., கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். தலைவர் ஜெகதீசன் முன்னிலை வகித்தார். முதல்வர் கிருஷ்ணவேணி வரவேற்றார்.
தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் துணை செயலரும், மூத்த சிவில் நீதிபதியுமான எஸ்.சந்தானகுமார் மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். பேராசிரியர்கள், பெற்றோர்கள், அலுவலர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

