UPDATED : மே 13, 2026 06:30 PM
ADDED : மே 13, 2026 06:24 PM
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை ரமணாஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசியதாவது: மாணவர்கள் கல்வியின் மூலம் மட்டுமே முன்னேற முடியும் பெற்றோர்களை என்றைக்கும் கைவிடக் கூடாது நமக்கு நமது முன்னேற்றத்திற்கு காரணம் அவர்களே கடமை கண்ணியம் நேர்மையாக பண்புகளை கொண்டு இருந்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என பேசினார்.
அவர் 668 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். மேலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரேங்க் பெற்ற 20 க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.
விழாவில் கல்லூரி செயலர் இளங்கோவன், பி.எட்., கல்லூரி செயலர் சங்கரநாராயணன் , முதல்வர் தில்லை நடராஜன், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விழாவை துணை முதல்வர் பெளர்ணா ஒருங்கிணைத்தார். சேர்மன் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
--
