/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மயானப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்
/
மயானப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : பிப் 26, 2024 12:59 AM
சிவகாசி : சிவகாசி விஸ்வநத்தம் ஊராட்சி பழையூர் மாரியம்மன் கோயில் தெருவில் வருவாய் துறையினர் மயானப்பாதையில் தனிநபரின் ஆக்கிரமிப்பை அகற்றினர்.
சிவகாசி விஸ்வநத்தம் பழையூர் மாரியம்மன் கோயில் தெருவினர் பயன்படுத்தி வந்த வந்த மயானப்பாதை, சுடுகாட்டை மறைத்து தனி நபர் முள் வேலி, இரும்புக் கதவுகள் அமைத்திருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் கொலை செய்யப்பட்டார். சுடுகாட்டை மறைத்து அமைக்கப்பட்ட முள் வேலி, இரும்புக் கதவை அகற்றினால்தான் உடலை அடக்கம் செய்ய முடியும் நிலை இருந்தது.
இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறையினர் சமதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். முள் வேலி இரும்புக் கதவுகள் மண் அள்ளும் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. தொடர்ந்து செல்வராஜின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

