நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் ஆர்.ஆர். நகர் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சர்ச்சில் சிற்றாலயம் நிறுவப்பட்டு பொன் விழா நினைவு கட்டடமாக மரியா மஹால் என்ற அசன மண்டபம் புதிதாக கட்டப்பட்டது.
விருதுநகர் மறைவட்ட அதிபர் அருள் ராயன் முன்னிலையில், மதுரை உயர்மறை மாவட்ட முன்னாள் பேராயர் அந்தோணி பாப்புசாமி திருச்சபை முறைப்படி அர்ச்சித்து திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து நடந்த மத நல்லிணக்க கூட்டத்தில் மும்மதத் தலைவர்கள் பங்கேற்றனர். நிறைவாழ்வு நகர் பாதிரியார் அந்தோணிசாமி, பாண்டியன் நகர் பாதிரியார் லாரன்ஸ், சாத்துார் பாதிரியார் காந்தி, அருப்புக்கோட்டை பாதிரியார் அந்தோணி பாக்கியம், கருமாத்துார் பாதிரியார் இன்னாசிமுத்து, மறைமாவட்ட பொருளாளர் அந்தோணிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

