நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பில், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்கவும், மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை ரத்து செய்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம் நடந்தது.
மாவட்ட தலைவர் குமார் பாண்டி தலைமை வகித்தார். பேரூராட்சி ஊழியர் சங்க மாநில பொருளாளர் பாலமுருகன் துவக்கி வைத்து பேசினார். மாநில செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன் , பல்வேறு சங்க நிர்வாகிகள் பேசினர். மாவட்ட துணைத் தலைவர் தேவராஜ் நன்றி கூறினார்.

