sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரோட்டில் நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் சிவகாசியில் போக்குவரத்திற்கு இடையூறு

/

ரோட்டில் நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் சிவகாசியில் போக்குவரத்திற்கு இடையூறு

ரோட்டில் நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் சிவகாசியில் போக்குவரத்திற்கு இடையூறு

ரோட்டில் நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் சிவகாசியில் போக்குவரத்திற்கு இடையூறு


ADDED : பிப் 11, 2025 04:45 AM

Google News

ADDED : பிப் 11, 2025 04:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசியில் இருந்து வெம்பக்கோட்டை செல்லும் ரோட்டில் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதோடு விபத்திற்கும் வழி வகுக்கிறது.

தொழில் நகரான சிவகாசிக்கு தினமும் 100 க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. இவ்வாறு வரும் வாகனங்களில் பெரும்பான்மையானவை போக்குவரத்து நிறைந்த பைபாஸ் ரோடு, திருத்தங்கல் ரோடு, சாத்துார் ரோடு, சிறுகுளம் கண்மாய்கரை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்படுகின்றது. இதனால் அவ்வப்போது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதோடு விபத்தும் ஏற்படுகிறது. சமீபகாலமாக சிவகாசியில் இருந்து வெம்பக்கோட்டை செல்லும் ரோட்டில் இருபுறமும் அதிக அளவில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

இதனால் காலை மாலையில் பள்ளி, கல்லுாரி பஸ்கள், நகர் பஸ்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படுகின்றது. ரோட்டில் பாதி அளவு மறைத்து நிற்பதால் மற்ற வாகனங்கள் சிரமமின்றி செல்ல முடியவில்லை. டூவீலரில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் கனரக வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us