ADDED : மே 27, 2026 11:56 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் மாவட்ட சிறையில் முதன் முறையாக கைதிகளை சந்திக்க வரும் பார்வையாளர்களுக்கான சந்திப்பு சட்ட உதவி மையத்தை முதன்மை மாவட்ட நீதிபதி கந்தகுமார் தலைமை வகித்து திறந்து வைத்தார்.
இதில் முதன்மை குற்றவியல் நீதித்துறை நீதிபதி ராஜகுமார், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் பிச்சைராஜன், வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவர் பாலமுருகன், சிறை கண்காணிப்பாளர் பாண்டி, வழக்கறிஞர் அரவிந்த் உள்பட பலர் பங்கேற்றனர்.
