ADDED : பிப் 21, 2025 07:06 AM
அ நிறம் | அளவு
காரியாபட்டி: காரியாபட்டி மேல, கீழ அழகியநல்லூரில் இரு பிரிவினரிடையே பிரச்னை இருந்து வருகிறது.
இதனால் நுாறு நாள் வேலை திட்டத்தை தனியாக நடத்த வேண்டுமென ஒரு பிரிவினர் வலியுறுத்தியது. இதற்கு மற்றொரு பிரிவினர் எதிர்த்தனர். நேற்று நுாறு நாள் வேலை திட்டம் தொடங்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு பிரிவினர் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
எதிர் பிரிவினருக்கு நடந்த நுாறு நாள் வேலை திட்டம் நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரோடு மறியலில் ஈடுபட்டவர்கள் சமுதாய ரீதியாக இருக்கும் பிரச்னை குறித்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
