ADDED : செப் 14, 2026 12:37 AM

சிவகாசி: சிவகாசி பஸ் ஸ்டாண்ட் அருகே விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைக்க அனுமதி கோரி ஹிந்து முன்னணி நிர்வாகிகள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடு பட்டனர்.
சிவகாசி பகுதியில் பல்வேறு இடங்களில் சிலை பிரதிஷ்டை செய்ய அனுமதி கோரிய நிலையில், கடந்த ஆண்டை போல 53 இடங்களில் மட்டும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய போலீசார் சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. ஹிந்து முன்னணி சார்பில் சிவகாசி பஸ் ஸ்டாண்ட் முன்பு விநாயகர் சிலை அமைக்க போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் அனுமதி கொடுக்கவில்லை.
பஸ் ஸ்டாண்ட் முன்பு விநாயகர் சிலை வைத்து வழிபட செய்ய அனுமதி வேண்டி சிவகாசி சிவன் கோயில் முன்பு ஹிந்து முன்னணி மாவட்ட செயற்கை உறுப்பினர் முருகேசன் தலைமையில் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலை வைப்பதற்கு போலீசார் ஆலோசனை செய்து வருகின்றனர்.
