ADDED : ஜன 08, 2026 06:01 AM

ராஜபாளையம்: ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் போலீசாரால் தாக்கி கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற ஹிந்து முன்னணி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லுாரில் செல்வ முத்துக்குமரன் கோயிலை இடிப்பதற்கு அப்பகுதி மக்கள், ஹிந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடு பட்டனர்.
அப்போது நடந்த தள்ளு முள்ளுவில் காடேஸ்வரா சுப்ரமணியம் காய மடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை போலீசார் தாக்கியதாக கூறி ராஜ பாளையம் ஜவகர் மைதானத்தில் ஹிந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா தலைமையில் மாவட்ட தலைவர் யுவராஜ், துணைத்தலைவர் சஞ்சீவி முன்னிலையில் மாவட்ட பொருளாளர் வினோத், பொதுச்செயலாளர் சந்திரன், இணை அமைப்பாளர் சித்திரபுத்திரன் உள்ளிட்ட 14 பேர் எதிர்ப்பு கோஷமிட்டு ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
போலீசார் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

