/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பேராபட்டி உயர்நிலைப் பள்ளியை தரம் உயர்த்த எதிர்பார்ப்பு
/
பேராபட்டி உயர்நிலைப் பள்ளியை தரம் உயர்த்த எதிர்பார்ப்பு
பேராபட்டி உயர்நிலைப் பள்ளியை தரம் உயர்த்த எதிர்பார்ப்பு
பேராபட்டி உயர்நிலைப் பள்ளியை தரம் உயர்த்த எதிர்பார்ப்பு
ADDED : அக் 11, 2024 04:40 AM
சிவகாசி; சிவகாசி அருகே பேராபட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என பெற்றோர், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி அருகே பேராபட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடுநிலைப் பள்ளியாக இருந்த இப்பள்ளி தன்னார்வலர்கள் இடம் வாங்கி கொடுத்த பின்னர் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு 190 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் 50 பேர் பத்தாம் வகுப்பு படிக்கின்றனர்.
இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்த பெரும்பான்மையான மாணவிகள் மேல்நிலைப் பள்ளிக்கு சிவகாசிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விடுகின்றனர். மாணவர்களும் மேல்நிலைப் படிப்பை தொடராமல் பட்டாசு ஆலை உள்ளிட்ட கூலி வேலைகளுக்கு சென்று விடுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்காக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பொது மக்கள் நிதியாக இரண்டு லட்சம் ரூபாய் அரசுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பேராபட்டியில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவிகள் மேல்நிலைப் பள்ளியில் தொடரவில்லை.
இதே போல் அருகில் உள்ள அனுப்பன்ங்குளம் உயர்நிலைப் பள்ளியிலும் பத்தாம் வகுப்பிற்குப் பின்னர் மாணவிகள் மேல்நிலைப் பள்ளியை தொடர வழி இல்லாமல் படிப்பை நிறுத்தி விடுகின்றனர். இதனால் ஒவ்வொரு கல்வியாண்டிலும் குறைந்தது 50 மாணவிகள் இடை நிற்கின்றனர்.
எனவே மாணவிகளின் இடைநிற்றலை கருத்தில் கொண்டு பேராபட்டி உயர்நிலைப் பள்ளியை அரசு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என பெற்றோர்கள் மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.