நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி கிளை இந்திய பட்டய கணக்காளர் சம்மேளனத்தின் 13 வது பதவியேற்பு விழா நடந்தது.
மத்திய கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திரகுமார் தலைமை வகித்தார். புதிய தலைவராக கார்த்திக், துணைத் தலைவர், பொருளாளர் சுரேஷ் சந்தர், செயலாளர் சுனேஸ்வரன், உறுப்பினர்கள் குழு தலைவர் பாலமுருகன், மாணவர் குழு தலைவர் சிவ ரூப கணேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவி ஏற்றுக் கொண்டனர். தென்னிந்திய பிராந்திய குழு உறுப்பினர் அருண், ராஜராஜேஸ்வரன், துங்கர் ஜைன், தென்னிந்திய பிராந்தியம் முன்னாள் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சிவகாசி கிளை தலைவர் பாலமுருகன், செயலாளர் சுரேஷ் சந்தர் செய்தனர்.

