ADDED : பிப் 09, 2025 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் இ.கம்யூ., சார்பில் தமிழக அரசை மத்திய பட்ஜெட்டில் புறக்கணிப்பதை கண்டித்து பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது.
மாவட்டச் செயலாளர் லிங்கம் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி அமைப்பு செயலாளர் ரவி, நகரச் செயலாளர் விஜயன் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.பி., அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., பொன்னுப்பாண்டி, இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் பகத்சிங் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர்.

