ADDED : ஆக 05, 2025 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி துவக்க விழா வேந்தர் ஸ்ரீதரன் தலைமையில் நடந்தது.
இணை வேந்தர் அறிவழகி, துணைத்தலைவர்கள் சசி ஆனந்த், அர்ஜுன் கலசலிங்கம் முன்னிலை வகித்தனர். துணைவேந்தர் நாராயணன் வரவேற்றார். பதிவாளர் வாசுதேவன் அறிமுக உரையாற்றினார்.
டீன் கல்பனா புத்தாக்க பயிற்சி குறித்து பேசினார். பெங்களூரு மைக்ரோசாப்ட் நிறுவன பொறியாளர் சேக் அலி உர் ரஹ்மான் பேசினார்.
விழாவில் பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பேராசிரியர் செல்வ பழம் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் குழுவினர் செய்திருந்தனர்.