நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி காக்கி வாடன்பட்டி ஆர்.பொன்னுசாமி நாயுடு கல்வியியல் கல்லுாரியில் மாணவிகளுக்கு கணினி புத்தாக்க பயிற்சி நடந்தது.
கல்லுாரி தாளாளர் பொன்ராஜ் தலைமை வகித்தார். கே.ஆர்.பி., கலை, அறிவியல் கல்லுாரி முதல்வர் ராம் ஜெயந்தி முன்னிலை வகித்தார். கே.ஆர்.பி., கலை.அறிவியல் கல்லுாரி கணினி அறிவியல் துறை பேராசிரியர்கள் விரிதாள் மென்பொருள், விளக்கக் காட்சி மென்பொருள் குறித்து விளக்கினர். கல்வியியல் கல்லுாரி முதல்வர் கண்ணன் நன்றி கூறினார்.

