sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கல்பாக்கம் முதல் அணு உலையில் மின் உற்பத்தி துவக்க வலியுறுத்தல்

/

கல்பாக்கம் முதல் அணு உலையில் மின் உற்பத்தி துவக்க வலியுறுத்தல்

கல்பாக்கம் முதல் அணு உலையில் மின் உற்பத்தி துவக்க வலியுறுத்தல்

கல்பாக்கம் முதல் அணு உலையில் மின் உற்பத்தி துவக்க வலியுறுத்தல்


ADDED : டிச 28, 2024 06:26 AM

Google News

ADDED : டிச 28, 2024 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஆறு ஆண்டுகளாக உற்பத்தி முடங்கியுள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், மின் உற்பத்தியை துவக்குமாறு, இந்திய அணுமின் கழகத்தை, தமிழக மின் வாரியம் வலியுறுத்தியுள்ளது.

மத்திய அரசின் இந்திய அணு மின் கழகத்திற்கு, செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் அணு மின் நிலையம் உள்ளது. இங்கு தலா, 220 மெகா வாட் திறனில், இரு அணு உலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிலிருந்து தமிழகத்திற்கு தினமும், 331 மெகாவாட் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதி மின்சாரம், அண்டை மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் பராமரிப்பு பணிக்காக, 2018 ஜன., 30ல் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அங்கிருந்து தமிழகத்திற்கு ஒதுக்கியதில் பாதி மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது.

தமிழகத்தில் ஜனவரி முதல் மின் தேவை அதிகரிக்க உள்ளது. எனவே, ஆறு ஆண்டுகளாக மின் உற்பத்தி முடங்கியுள்ள கல்பாக்கம் அணு மின் நிலையத்தின் முதல் அணு உலையில், விரைவில் உற்பத்தியை துவக்குமாறு, அணு மின் கழகத்தை, மின் வாரியம் வலிறுயுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us