/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரூ.30 ஆயிரம் மானியத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம்
/
ரூ.30 ஆயிரம் மானியத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம்
ADDED : ஜூலை 21, 2025 02:03 AM
விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: 2025-26ம் ஆண்டுக்கான தேசிய நீடித்த நிலையான வேளாண் இயக்க திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணைய அமைப்பு விருதுநகர் மாவட்டத்தில் 340 எக்டேரில் செயல்படுத்த ரூ.1.02 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக வேளாண் துறை மூலம் 340 விவசாயிகள் தேர்வு செய்யப்படுவர். இதன் கீழ் பயன்பெற விரும்புவோர் குறைந்தது ஒரு ஏக்கர் நில உரிமை உடையவராக இருக்க வேண்டும்.
தனது சொந்த செலவில் ரூ.60 ஆயிரத்தில் வேளாண் பயிர் செயல் விளக்கத்திடல், மண்புழு உர தொட்டி, கால்நடை இனங்களான ஒரு கறவை மாடு அல்லது 10 ஆடுகள், தோட்டக்கைல பழ மரக்கனறுகள், தேனீ வளர்ப்பு பெட்டி போன்றவை திட்ட வழிகாட்டுதலின் படி அமைக்க வேண்டும்.
இவ்வாறு ரூ.60 ஆயிரத்தில் ஒருங்கிணைந்த பண்ணையத்தை உருவாக்கிய விவசாயிக்கு பின்னேற்பு மானியமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். எனவே விருதுநகர் மாவட்ட விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்தும் அல்லது தங்கள் பகுதி வேளாண் உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டும் பயன்பெறலாம், என்றார்.