/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கல்லுாரிகளுக்கு இடையேயான போட்டி
/
கல்லுாரிகளுக்கு இடையேயான போட்டி
ADDED : மார் 08, 2026 04:45 AM
சிவகாசி: சிவகாசி, எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி, சுயநிதி கணினி அறிவியல் துறை சார்பில் மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது.
மாணவிகள் விஜய பிரியா, ஹர்ஷினி தொகுத்து வழங்கினர். கணினி அறிவியல் சுயநிதி பிரிவு துறை தலைவர் பிரிசில்லா வரவேற்றார். கணினி அறிவியல் துறைத் தலைவர் பொன்மலர் தலைமை வகித்தார். இணை பேராசிரியர் தேவி ஆரோக்கியாவனிதா, தரவு அறிவியல் துறை தலைவர் கங்காதேவி, உதவி பேராசிரியர்கள் சுதா மகேஸ்வரி, ராதா, ஜோதிலட்சுமி, அருஞ்சுனை செல்வி போட்டிகளுக்கு நடுவராகப் பணியாற்றினர்.
கல்லுாரி முதல்வர் சுதா பெரியத்தாய் பரிசு வழங்கினார். விருதுநகர் வி.எச்.என்.எஸ்.என்., கல்லுாரி கோப்பையை வென்றது. கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர் நந்தினி நன்றி கூறினார்.

