sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிலைகள், கொடி மரங்கள் மாயம் கோயில் ஊழியர்களிடம் விசாரணை

/

சிலைகள், கொடி மரங்கள் மாயம் கோயில் ஊழியர்களிடம் விசாரணை

சிலைகள், கொடி மரங்கள் மாயம் கோயில் ஊழியர்களிடம் விசாரணை

சிலைகள், கொடி மரங்கள் மாயம் கோயில் ஊழியர்களிடம் விசாரணை


ADDED : பிப் 08, 2024 06:47 AM

Google News

ADDED : பிப் 08, 2024 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர் ; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து யானை கல் சிலைகள், கொடி மரங்கள் மாயமானது குறித்து மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கோயில் செயல் அலுவலர் முத்துராஜா, பட்டர்கள் கோயில் ஊழியர்களிடம் விசாரணையை துவக்கி உள்ளனர்.

இக்கோயில் செயல் அலுவலர் முத்துராஜா மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில், 2 புகார்கள் கொடுத்திருந்தார். அதில் கோவில் கல்யாண மண்டப மணமேடைப் படிகளில் இருபுறமும் இருந்த இரண்டு கல் யானை சிலைகள் சட்ட விரோதமாக அகற்றப்பட்டது. அதன் நிலை குறித்து விசாரிக்கவும்,

மற்றொரு புகாரில் ஆண்டாள், வடபத்திர சயனர், பெரியாழ்வார் சன்னதிகளில் இருந்த கொடி மரங்கள் கும்பாபிஷேகத்தின் போது மாற்றப்பட்டு புதிதாக மூன்று கொடி மரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் கோயிலில் இருந்த இரண்டு கொடி மரங்கள் சட்ட விரோதமாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரசாத கடை ஏலம் எடுத்து நடத்தி வந்த ராமரிடம் விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்..

இதுகுறித்து மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சில நாட்களுக்கு முன் ஆண்டாள் கோயிலில் விசாரித்தனர். இந்நிலையில் புகார் தொடர்பான விசாரணைக்கு, நேற்று காலை மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் நேரில் ஆஜராகுமாறு கோயில் செயல் அலுவலர் முத்துராஜா, சில பட்டர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி இருந்தது. அவர்களிடம் நேற்று மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.






      Dinamalar
      Follow us