sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிவகாசியில் இளநிலை உதவியாளர் குழாய் திறப்பாளர் சஸ்பெண்ட்

/

சிவகாசியில் இளநிலை உதவியாளர் குழாய் திறப்பாளர் சஸ்பெண்ட்

சிவகாசியில் இளநிலை உதவியாளர் குழாய் திறப்பாளர் சஸ்பெண்ட்

சிவகாசியில் இளநிலை உதவியாளர் குழாய் திறப்பாளர் சஸ்பெண்ட்


ADDED : ஜூலை 09, 2025 05:51 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசி மாநகராட்சியில் கடமையை சரியாக செய்யாமல் வருவாய் இழப்பிற்கு காரணமாக இருந்த இளநிலை உதவியாளர் செந்தில் குமாரையும் 45, நகரமைப்பு மேற்பார்வையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த குழாய் திறப்பாளர் முத்துவேல் பாண்டியனையும் 52, சஸ்பெண்ட் செய்து கமிஷனர் சரவணன் உத்தரவிட்டார்.

சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிபவர் செந்தில்குமார். இவர் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மாநகராட்சியில் குழாய் திறப்பாளர் முத்துவேல் பாண்டியன்.

இவர் பொறியியல் துறையில் பணியாளர்கள் பற்றாக்குறையால் சில ஆண்டுகளாக வாகன காப்பகம், சைக்கிள் ஸ்டாண்ட் உள்ளிட்டவைகளுக்கு வசூல் செய்து வந்தார்.

இதில் முறைகேடு நடந்ததாக புகார் வந்ததையடுத்து இவரை கமிஷனர் மீண்டும் குழாய் திறப்பாளராக பணிபுரிய உத்தரவிட்டார். இதற்கு அலுவலகத்தில் நகரமைப்பு மேற்பார்வையாளராக பணி புரியும் முத்துராஜ் தான் காரணம் என கருதிய முத்துவேல் பாண்டியன் அரிவாளுடன் அலுவலகத்திற்கு வந்து முத்துராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதனைத் தொடர்ந்து அவரையும் கமிஷனர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

இதனிடையே முத்துராஜ் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்ததையடுத்து முத்துவேல் பாண்டியனை போலீசார் கைது செய்து, அரிவாளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us