sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கண்மாய் தடுப்புச்சுவர், வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் இல்லை பெரிய பேராலி மக்கள் அவதி

/

கண்மாய் தடுப்புச்சுவர், வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் இல்லை பெரிய பேராலி மக்கள் அவதி

கண்மாய் தடுப்புச்சுவர், வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் இல்லை பெரிய பேராலி மக்கள் அவதி

கண்மாய் தடுப்புச்சுவர், வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் இல்லை பெரிய பேராலி மக்கள் அவதி


ADDED : அக் 22, 2024 04:36 AM

Google News

ADDED : அக் 22, 2024 04:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரிய பேராலி கண்மாய் ரோட்டில் தடுப்புச் சுவர், வி.ஏ.ஓ., அலுவலகம், கால்நடை மருத்துவமனைக்கு தனி கட்டடம் இல்லை உள்ளிட்ட எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி மக்கள் அவதிப்படுகின்றனர்.

விருதுநகர் அருகே உள்ள பெரிய பேராலியில் இருந்து மாந்தோப்பு, மேல, கீழ அழகிய நல்லுார் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் ரோடு பெரிய பேராலி கண்மாய் கரை வழியாக செல்கிறது. இந்த ரோடு மிகவும் குறுகலாகவும், இருபுறம் பள்ளம் நிறைந்து இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. இவ்வழியாக வாகனங்கள் எதிரெதிரேகடந்து செல்ல எதுவாக தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

முனியாண்டி கோயில், விளை நிலங்களுக்கு செல்ல ஜல்லி நிரப்பப்பட்டு ரோடு அமைக்கப்பட்டது. ஆனால் தார் ரோடாக அமைக்கப்படாததால் தற்போது சேறும், சகதியுமான ரோட்டில் செல்ல முடியாமல் திண்டாடுகின்றனர். இங்குள்ள ரேஷன் கடைக்கு அருகே கூடுதலாக நெற்களம் அமைக்க வேண்டும்.

மேலும் வி.ஏ.ஓ., அலுவலகம், கால்நடை மருத்துவமனைக்கு தனியாக கட்டடம் இல்லாமல் மகளிர் சுய உதவிக்குழு கட்டடத்தின் ஒரு பகுதியில் செயல்படுகின்றன. தபால் அலுவலகம் அமைந்துள்ள கட்டடத்தின் சுவர்களில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. இங்குள்ள வாறுகால்களை துார்வார பணியாளர்கள் இல்லாததால் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.






      Dinamalar
      Follow us