/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கருணாநிதி பிறந்த நாள் உதவிகள் வழங்கல்
/
கருணாநிதி பிறந்த நாள் உதவிகள் வழங்கல்
ADDED : ஜூன் 04, 2025 12:43 AM
சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்த து.
மாநகர செயலாளர் உதயசூரியன் தலைமை வகித்தார். மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் வனராஜா, மேயர் சங்கீதா, ஒன்றிய செயலாளர் விவேகன் ராஜ், பகுதி செயலாளர் காளிராஜ் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பங்கேற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், சலவை தொழிலாளிகளுக்கு இஸ்திரி பெட்டி, துாய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் அரிசி, அறுசுவை உணவு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: துாய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக்கும் திட்டம், புதுமை பெண், மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம், தமிழ் புதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல்வர் நிறைவேற்றும் ஒவ்வொரு திட்டத்திலும் கருணாநிதி வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.