ADDED : ஏப் 06, 2025 06:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. உயர்நிலைப் பள்ளியில் கிண்டர் கார்டன் மழலையர் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.
தாளாளர் குருவலிங்கம் தலைமை வகித்தார். மேனேஜிங் டிரஸ்டி சித்ரா மகேஸ்வரி, நிர்வாக அலுவலர் கமலா முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ராமநாதன் ஆண்டறிக்கை வாசித்தார்.
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை உஷாராணி மழலையர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.