sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பள்ளி வளாக கல்வி அலுவலகங்களால்; இடப்பற்றக்குறையால் மாணவர்கள் பாதிப்பு

/

பள்ளி வளாக கல்வி அலுவலகங்களால்; இடப்பற்றக்குறையால் மாணவர்கள் பாதிப்பு

பள்ளி வளாக கல்வி அலுவலகங்களால்; இடப்பற்றக்குறையால் மாணவர்கள் பாதிப்பு

பள்ளி வளாக கல்வி அலுவலகங்களால்; இடப்பற்றக்குறையால் மாணவர்கள் பாதிப்பு

1


ADDED : ஜூலை 12, 2025 04:18 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 04:18 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திலும் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலை பள்ளிகளின் மாணவர் சேர்க்கை, ஆசிரியர்களின் செயல்பாடுகள், மாணவர்களுக்கு வழங்கும் அரசு நலத்திட்ட உதவிகளை கொண்டு சென்று சேர்ப்பதற்கு ஒன்றியத்திற்கு ஒரு வட்டார கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இவற்றில் பெரும்பாலும் அரசு பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட கட்டடம் உள்ளிட்ட வளாகப் பகுதிகளை ஆக்கிரமித்து வட்டார கல்வி அலுவலகங்கள் செயல்பட்டு வருவதால் கற்பித்தல் பணிகள் பாதிப்பதாக கல்வியாளர்கள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது .

சிவகாசி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட ராஜபாளையம் வட்டார கல்வி அலுவலகம் எஸ்.எஸ் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ளது. இக்கட்டடம் தொகுதி எம்.எல்.ஏ.,வின் ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவியருக்கான கூடுதல் கழிப்பறை குடிநீர் வசதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு என அமைக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்துார் வட்டார கல்வி அலுவலகம் கிருஷ்ணன் கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், வத்திராயிருப்புக்கான அலுவலகம் மகாராஜபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் செயல்பட்டு வருகிறது.

இது போல் பெரும்பாலான வட்டார கல்வி அலுவலகம் அரசு பள்ளி வளாகங்களில் செயல்படுவதால் பள்ளி செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டு வந்ததை அடுத்து குறிப்பிட்ட கால கெடுவுக்குள் அரசு பள்ளி வளாகங்களில் இயங்கி வரும் அனைத்து வட்டார கல்வி அலுவலர்களும் வேறு இடங்களில் மாற்றி செல்ல வேண்டும் என தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.

இருப்பினும் இதுவரை மாற்றப்படாமல் செயல்படுவதால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கற்பித்தல் மற்றும் இட வசதி பற்றாக்குறையால் சிக்கல் இருந்து வருகிறது.

எனவே வட்டார கல்வி அலுவலகத்துக்கு தனி கட்டட வசதி அவசியம்.மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பள்ளி கல்வித்துறையின் உத்தரவை செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us