sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

l கோடை உழவு, பயிர் சுழற்சி செய்வது அவசியம்; l விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது

/

l கோடை உழவு, பயிர் சுழற்சி செய்வது அவசியம்; l விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது

l கோடை உழவு, பயிர் சுழற்சி செய்வது அவசியம்; l விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது

l கோடை உழவு, பயிர் சுழற்சி செய்வது அவசியம்; l விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது


ADDED : ஏப் 22, 2024 06:35 AM

Google News

ADDED : ஏப் 22, 2024 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் துவரை, எள், பருத்தி, கடலை, சோளம் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் பயிரிட்டு அறுவடை செய்தனர். அனைத்து விளை நிலங்களும் அடுத்த உழவுக்காக காத்திருக்கின்றன. தற்போது கோடை காலம் துவங்கி உள்ளதால் விளை நிலங்களில் கோடை உழவு செய்வது நல்லது.

சித்திரை உழவு பத்தரை மாற்று தங்கம் என்பர். அதற்கு முக்கிய காரணம் ஆழமாக கோடை உழவு செய்யும்போது பயிர்களின் தூர் பகுதி, சருகுகள் மண்ணுக்குள் புதைந்து மக்கி உரமாகும். மண்ணுக்குள் இருக்கும் பூஞ்சைகள், தீமை செய்யும் புழுக்கள் வெளியேறி பறவைகளுக்கு இரையாகியோ, வெயிலுக்கு காய்ந்தோ அழிந்து விடும்.

கோடை மழை பெய்யும் போது மழை நீர் தேங்கும். மண்ணுக்கு அடியில் காற்று புகுந்து இலகுவாகி எப்போதும் ஈரப்பதம் இருக்கும். பயிரிடும்போது அதன் வேர்கள் எளிதில் பரவி செழிப்பாக வளரும். அதே நேரம் பயிர் சுழற்சி முறையில் வேறு வேறு பயிர் வகைகளை சாகுபடி செய்வது நல்லது. இவ்வாறு வேளாண்துறை தொடர்ந்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

கோடை உழவு செய்த பின் தோட்ட வகை பயிர்களான கத்தரி, தக்காளி, மிளகாய், வெண்டை உள்ளிட்ட பயிர்கள் நடவு செய்வது நல்லது. ஒரே வகையான பயிர்களை பயிரிடாமல் சுழற்சி முறையில் பயிரிட்டால் மண்ணில் உள்ள சத்துக்கள் குறையாமல் பாதுகாக்கப்படும். பயிர்கள் செழிப்பாக வளரும்.

காரியாபட்டி வேளாண் உதவி இயக்குனர் செல்வராணி கூறியதாவது: கோடை உழவு அடுத்த சாகுபடிக்கான உரத் தேவையை குறைக்கும். நீரை நிலத்தில் தக்க வைக்கும். பூச்சி தொல்லையை குறைக்கும். களைகளை கட்டுப்படுத்தும். மண்ணிற்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். இதன் மூலம் பயிர்கள் செழிப்பாக வளர்ந்து கூடுதல் மகசூல் கிடைக்கும்.

கோடை உழவு செய்யாத விளைநிலங்களில் மேல் மண் அரிமானம் ஏற்படும். மண்ணில் உள்ள ஊட்டங்கள் விரயமாகும். கேழ்வரகு, குதிரைவாலி போன்ற பயிர் வகைகள் கோடை விவசாயத்தில் பயிரிடப்படுகின்றன.

சுழற்சி முறையில் பயிர்களை பயிரிடுவதற்கு விவசாயிகள் முன் வர வேண்டும். அதற்குத் தேவையான ஆலோசனைகளை வேளாண் அலுவலர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம், என்றார்.






      Dinamalar
      Follow us