sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நிலப்பறவைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு

/

நிலப்பறவைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு

நிலப்பறவைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு

நிலப்பறவைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு


ADDED : மார் 17, 2025 05:39 AM

Google News

ADDED : மார் 17, 2025 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார், : ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின் 4 வனச்சரகங்களிலும் நிலப்பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்றுடன் நிறைவடைந்தது.

தமிழகத்தில் வனத்துறை சார்பில் நிலப்பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று முன்தினம் துவங்கியது. 2 நாட்கள் நடந்த இப்பணியில் வனத்துறையினர், தன்னார்வலர்கள், பறவை ஆர்வலர்கள பங்கேற்றனர்.

இதன்படி ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தில் ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு, சாப்டூர் வனச்சரகத்தில் பாதுகாக்கப்பட்ட வனம் மற்றும் மலையடிவாரத்தில் நேற்று முன்தினம் காலை 7:00 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையிலும் வனத்துறையினர் பாதுகாப்புடன் தன்னார்வலர்கள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.

இதில் ஒவ்வொரு பகுதியிலும் 10 முதல் 30க்கும் மேற்பட்ட நிலப்பறவைகளை தன்னார்வலர்கள் கண்டறிந்தனர். கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட தரவுகளை அந்தந்த வனச்சரகத்தின் மூலம் ஒருங்கிணைத்து மாநில வனத்துறையின் நிபுணர்கள் குழுவினர் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு அதன் பின்னர் தான் நிலப்பறவைகள் வகைகள், எண்ணிக்கைகள் தெரிய வருமென வனத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us