ADDED : பிப் 04, 2024 03:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் ரோட்டரி சங்கத்தின் சார்பாக காமராஜ் பொறியியல் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தலைமைப்பண்பு பயிற்சி மூன்று நாட்கள் நடந்தது.
இதற்கான துவக்க விழாவில் ரோட்டரி சங்கத்தலைவர் சண்முகம், செயலாளர் ராஜீவன், கல்லுாரி செயலாளர் தர்மராஜன், முன்னாள் செயலாளர் மகேஷ் குமார், கல்லுாரி முதல்வர் செந்தில் உள்பட பலர் பங்கேற்றனர். தலைமை பயிற்சியாளர் குருசாமி பேசினார். பஞ்ச் குருகுலம் சார்பாக பயிற்சியாளர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.