sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: ஒரு அறை, வாகனம் சேதம்

/

மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: ஒரு அறை, வாகனம் சேதம்

மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: ஒரு அறை, வாகனம் சேதம்

மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: ஒரு அறை, வாகனம் சேதம்


ADDED : ஏப் 28, 2025 12:33 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே கீழ ஒட்டம்பட்டியில் பட்டாசு ஆலை இருப்பு அறையின் மீது மின்னல் தாக்கியதில் பட்டாசுகள் வெடித்து சிதறின. அந்த அறை, அருகில் நின்ற சரக்கு வாகனம் சேதமடைந்தது.

சிவகாசியைச்சேர்ந்தவர் மகாராஜன். இவருக்கு சொந்தமான அய்யம்மாள் பட்டாசு ஆலை கீழ ஒட்டம்பட்டியில் உள்ளது. இந்த ஆலையில் நேற்று விடுமுறைநாள் என்பதால் பணி நடைபெறவில்லை.இந்த நிலையில் சாத்துார், சுற்றுப்பகுதியில் நேற்று மதியம் சூறாவளியுடன் இடி மின்னலுடன் மழை பெய்யத் துவங்கியது. பட்டாசு ஆலையில் இருப்பு அறையில் மாலை 4:00 மணிக்கு மின்னல் தாக்கியது.

அறையில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த பேன்சி ரக வெடிகள் வெடித்து சிதறின. அறை முற்றிலும் சேதமடைந்தது. அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனம் தீப்பற்றி எரிந்து கருகியது. பணியாளர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சாத்துார் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us