/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
எம். சாண்ட் லாரி பறிமுதல் டிரைவர் கைது
/
எம். சாண்ட் லாரி பறிமுதல் டிரைவர் கைது
ADDED : ஜூன் 18, 2025 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி: நரிக்குடி பகுதியில் திருச்சுழி மண்டல துணை தாசில்தார் திருக்கண்ணமுனியாண்டி தலைமையில் வருவாய் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். நரிக்குடியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த லாரியை சோதனை செய்தனர்.
அனுமதி சீட்டு இல்லாமல் 2 யூனிட் எம். சாண்ட் மணல் ஏற்றி வந்தது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்து நரிக்குடி போலீசில் ஒப்படைத்தனர். லாரியை மானாமதுரை வல்லநாடை சேர்ந்த நாகராஜன் ஓட்டி வந்தார் அவரை போலீசார் கைது செய்தனர்.