ADDED : ஆக 14, 2025 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டி ஓடைப்பட்டியைச் சேர்ந்த கருப்பையா. இவரது மகன் வெள்ளிமலை 42, நேற்று முன்தினம் மாலை ஊருக்கு செல்ல பஸ்சில் உட்கார்ந்து இருந்தவர் திடீரென வாந்தி எடுத்தார்.
விஷம் குடித்ததால் சக பயணிகள் காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு போலீசார் விசாரித்த தில் தந்தை கருப்பையாவுடன் ஏற்பட்ட தகராறில் மன உளைச்சல் ஏற்பட்டு விஷம் குடித்ததாக தெரிவித்தார்.
மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு நேற்று காலை இறந்தார். காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

