ADDED : ஜன 27, 2026 05:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்துார்: சேத்துார் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம் 56, இவரது மகன் வேல்முருகன் இருவரும் சேர்ந்து கடந்த அக்., அருகே உள்ள வீட்டை சேர்ந்த வசந்த குமாரை கொலை செய்த வழக்கில் கைது செய்து தற்போது பரமசிவம் ஜாமினில் வெளியே வந்தார்.
மன உளைச்சலில் இருந்தவர் நேற்று முன்தினம் காலை தேவதானம் மேற்கே தனியார் பம்ப்செட் ரூமில் பூச்சி மருந்தை குடித்துள்ளார்.
ஆபத்தான நிலையில் இருந்தவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார். சேத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

