sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிவகாசியில் வீட்டின் கதவை உடைத்து முகமூடி திருடர்கள் கொள்ளை முயற்சி

/

சிவகாசியில் வீட்டின் கதவை உடைத்து முகமூடி திருடர்கள் கொள்ளை முயற்சி

சிவகாசியில் வீட்டின் கதவை உடைத்து முகமூடி திருடர்கள் கொள்ளை முயற்சி

சிவகாசியில் வீட்டின் கதவை உடைத்து முகமூடி திருடர்கள் கொள்ளை முயற்சி


ADDED : ஜன 07, 2024 04:06 AM

Google News

ADDED : ஜன 07, 2024 04:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி அருகே பிருந்தாவனம் நகரில் பூட்டிய வீட்டில் நேற்று முன்தினம் இரவு முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்த இரு மர்ம நபர்கள் கதவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.

சிவகாசி - விளாம்பட்டி ரோட்டில் பிருந்தாவனம் நகர் 28 வது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி வசந்தாதேவி 66. இவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன் வசந்தாதேவி வீட்டைப் பூட்டி விட்டு தனது உறவினர் வீட்டிற்கு சென்றார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, அதிகாலை 2:20 மணிக்கு ஹெல்மெட், முகமூடி அணிந்த இரு மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் வந்து கடப்பாரை கொண்டு கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றது தெரிய வந்தது.

வீட்டில் நகை, பணம் உள்ளிட்ட பொருட்கள் இல்லாததால் தப்பியது. மாரனேரி போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us