ADDED : ஆக 28, 2026 12:22 AM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அஜித் நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் 62. இவர் ஆக.13ல் நேபாளத்திற்கு ஆன்மிக சுற்றுலா புறப்பட்டார். ஆக.25 மதியம் 1:30 மணி வரை தனது மகனுடன் அலைபேசியில் பேசியுள்ளார்.
நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்ட பின் குடும்பத்தினர் தமிழ்ச்செல்வனை தொடர்புகொள்ள முயன்றனர்.: ஆனால் எவ்வித பதில் தகவலும் கிடைக்கவில்லை. சுற்றுலா அழைத்துச் சென்ற டிராவல்ஸ் நிறுவனத்தினாலும் நேபாளத்தில் உள்ள பணியாளர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. தமிழ்ச்செல்வனை அழைத்துவர நடவடிக்கை எடுத்து வருவதாக அருப்புக்கோட்டை வருவாய் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
