sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ராஜபாளையம் கண்மாய் கரையில் மருத்துவ கழிவுகள்

/

ராஜபாளையம் கண்மாய் கரையில் மருத்துவ கழிவுகள்

ராஜபாளையம் கண்மாய் கரையில் மருத்துவ கழிவுகள்

ராஜபாளையம் கண்மாய் கரையில் மருத்துவ கழிவுகள்


ADDED : மார் 22, 2025 06:00 AM

Google News

ADDED : மார் 22, 2025 06:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் எதிரே பெரியாதி குளம்கண்மாய் கரையில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள பெரியாதி குளம் கண்மாயை

ஸ்ரீவில்லிபுத்துார் யூனியன் பராமரிப்பின் கீழ் உள்ள இக்கண்மாயை ஆதாரமாக கொண்டு நெல், கரும்பு, தென்னை உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. இது தவிர சுற்றியுள்ள அண்ணாநகர், பச்ச மடம், எம்.ஆர் நகர், ஐ.என்.டி.யூ.சி நகர் குடியிருப்புகளுக்கு முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது.

நேற்று முன்தினம் இரவு சிலர் வாகனத்தில் வந்து மருத்துவ கழிவுகளை கொட்டி சென்றுள்ளனர்.

இதில் பயன்படுத்திய ஊசி, காலாவதி மாத்திரைகள், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் உடைகள், பஞ்சு, ரத்தம் தோய்ந்த மருத்துவ கழிவுகள் உள்ளதால் நோய் தொற்று அபாயம் உள்ளது.

கண்மாய் கலுங்கு அருகே கொட்டப்பட்டுள்ளதால் நீர்வரத்தின் போதும் விவசாயத்தின் போது பாதிப்பு ஏற்படும்.

மருத்துவ கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த விதிகள் உள்ள நிலையில் கழிவுகளை கொட்டி மீறலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us