ADDED : மே 16, 2025 02:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்:கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை 100 சதவீதம் உறுதி செய்யும் வகையில் கல்விக் கனவு என்ற உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் ஜெயசீலன் உயர்கல்வி பெறுவதற்கான வழிமுறைகள், பயன்கள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.