ADDED : ஜூன் 30, 2025 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது.
பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாக நடந்த இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் உமாராணி தலைமை வகித்தார். கணிதத்துறை தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார். வேதியல் துறை தலைவர் ஹேமலதா வரவேற்றார். தாசில்தார் மாரிமுத்து பேசினார். ஏற்பாடுகளை பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், உதவி பேராசிரியர்கள் சுகன்யாதேவி, கலைச்செல்வி செய்தனர். பொருளாதாரத் துறை தலைவர் கோபால் நன்றி கூறினார்.