/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப் பு
/
அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப் பு
அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப் பு
அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப் பு
ADDED : அக் 19, 2024 03:08 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை நவ. 15க்கு ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
2006- -2011 தி.மு.க., ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 2012ல் வழக்கு பதிவு செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த வழக்குகளில் இருந்து 2022 டிசம்பரில் தங்கம் தென்னரசும், 2023 ஜூலையில் சாத்துார் ராமச்சந்திரனும் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து இந்த வழக்குகளை மீண்டும் விசாரித்து அமைச்சர்களின் விடுதலை செல்லாது எனவும், மீண்டும் வழக்குகளை ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் முதலில் இருந்து விசாரிக்கவும் உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து அமைச்சர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதில் செப்., 6ல் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இதனிடையே ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அமைச்சர்கள் இருவர் மீதான வழக்குகளும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
இதில் தங்கம் தென்னரசு மீதான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அமைச்சர் ஆஜராகவில்லை.
இருதரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆஜராகினர்.
உச்ச நீதிமன்ற தடை இருக்கும் நிலையில் வழக்கின் விசாரணையை நவ., 15க்கு நீதிபதி ஜெயக்குமார் ஒத்தி வைத்தார்.