நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் தமிழ்த்துறை, கல்லுாரியின் இந்திய பாரம்பரிய அறிவு முறைமை அமைப்பு இணைந்து உலக தாய்மொழி தின விழாவை நடத்தியது. இணைப்பேராசிரியர் அமுதவல்லி, செம்மொழியாம் நமது தாய்மொழி என்ற தலைப்பில் பேசினார்.
மாணவிகள் நாவரசி தமிழிலும், நாகலட்சுமி தெலுங்கிலும், பவானி கன்னத்திலும், அபர்ணா மலையாளத்திலும் மொழிகளின் பெருமை பற்றி பேசினர். இணை பேராசிரியர் சர்மிளி, துறைத் தலைவர் காவேரி பேசினர்.

