sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஆண்டுக்கணக்கில் போடப்படாத சிட்கோ ரோடுகள் சேதமானதால் வாகன ஓட்டிகள் அவதி

/

ஆண்டுக்கணக்கில் போடப்படாத சிட்கோ ரோடுகள் சேதமானதால் வாகன ஓட்டிகள் அவதி

ஆண்டுக்கணக்கில் போடப்படாத சிட்கோ ரோடுகள் சேதமானதால் வாகன ஓட்டிகள் அவதி

ஆண்டுக்கணக்கில் போடப்படாத சிட்கோ ரோடுகள் சேதமானதால் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : ஜன 28, 2024 06:46 AM

Google News

ADDED : ஜன 28, 2024 06:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர், : விருதுநகர் சூலக்கரையில் அமைந்துள்ள சிட்கோ தொழிற்சாலைகளுக்கு ஆண்டுக்கணக்கில் ரோடுகள் போடப்படவில்லை. இதனால் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

விருதுநகரில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக காமராஜர் ஆட்சியின் போது 1965ல் சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் எனும் சிட்கோ சூலக்கரையில் துவங்கப்பட்டது. அதன் வளாகத்தில் பாலிபேக் தொழிற்சாலைகள், பிளாஸ்டிக், பெயின்ட், கார்மென்ட்ஸ், ஆயில் கேன், அச்சகம், பேப்பர் கப், நெசவு ஆலைகள் அதிகளவில் உள்ளன.

இதற்காக அதிகளவில் கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. ஆனால் இந்த சிட்கோ ரோடுகளோ போக்குவரத்துக்கு சிறிதும் பயன்படுத்த முடியாத அளவு கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். காமராஜர் காலத்தில் போடப்பட்ட ரோடுகள் அனைத்தும் பெயர்ந்து தற்போது மண் தரை தான் உள்ளன.

சில ஆண்டுகள் முன் டெண்டர் விடப்பட்டு மண் கொட்டப்பட்டன. அதன் பின் எந்த பணிகளும் நடக்கவில்லை. தற்போது அந்த வளாகம் முழுவதுமே போக்குவரத்துக்கு லாயக்கற்ற ரோடுகளால் நிறைந்துள்ளன.

சிட்கோ குடியிருப்பு, அலுவலக கட்டடங்களும் செயல்படாமல் முடங்கி கிடக்கின்றன. ஆகவே மாவட்ட நிர்வாகம் தொழில் வளர்ச்சிக்காக கட்டப்பட்ட சிட்கோ வளாகத்தில் தேவையான ரோடு வசதிகளை ஏற்படுத்த அந்நிறுவனத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us