/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருத்தங்கல் ரோட்டில் நடமாடும் மாடுகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
திருத்தங்கல் ரோட்டில் நடமாடும் மாடுகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
திருத்தங்கல் ரோட்டில் நடமாடும் மாடுகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
திருத்தங்கல் ரோட்டில் நடமாடும் மாடுகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : அக் 29, 2025 07:43 AM

சிவகாசி: திருத்தங்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே விருதுநகர் செல்லும் மெயின் ரோட்டில் நடமாடும் மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். ரோட்டில் திரியும் மாடுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே விருதுநகர் செல்லும் மெயின் ரோட்டில் கோயில் கடைகள் உள்ளது. மேலும் இந்த ரோட்டில் எப்பொழுதுமே போக்குவரத்து நிறைந்திருக்கும்.
பள்ளி கல்லுாரி வாகனங்கள் இந்த ரோட்டில் தான் சென்று வருகின்றன.
இந்நிலையில் விருதுநகர் செல்லும் மெயின் ரோட்டில் எந்நேரமும் மாடுகள் நடமாடுகின்றது.
ஒரு சில மாடுகள் ரோட்டின் நடுவிலேயே அமர்ந்து கொள்கிறது. இதனால் எந்த வாகனமும் எளிதில் சென்று வர முடியவில்லை. போக்குவரத்து நிறைந்த ரோட்டில் மாடுகள் நடமாடுவதால் அனைத்து வாகன ஓட்டிகளும் சிரமப்படுவதோடு விபத்திலும் சிக்குகின்றனர். மாடுகள் விலகிச் செல்வதற்காக ஹாரன் அடித்தாலும் இவைகள் கொஞ்சம் கூட நகர்வதில்லை. ஒரு சில மாடுகள் பயந்து ஓடி வாகன ஓட்டிகளை விபத்திற்கு உள்ளாக்குகிறது.
அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அவசரத்திற்கு வருகின்ற ஆம்புலன்ஸ் வாகனத்திற்கும் இதே நிலைதான் ஏற்படுகின்றது. எனவே இப்பகுதியில் நடமாடுகின்ற மாடுகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

